வரலாறு காணாத உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் இன்று சிறப்பான லாபத்தை கண்டன. 

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 652 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 535 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரம் புள்ளிகளை அடைந்தது. கடந்த 20ம் தேதி சென்செக்ஸ் 77 ஆயிரத்து 478 புள்ளிகளை தொட்டதே இதுவரை உச்சமாக இருந்த நிலையில், அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

Night
Day