வரலாறு காணாத உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியமைந்ததையடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இன்றைய வர்த்தக நேரத்தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்து 79 ஆயிரத்து 595 புள்ளிகளையும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 142 புள்ளிகளையும் எட்டி உச்சம் தொட்டது. ஜியோ கட்டண உயர்வையடுத்து, எண்ணெய்-தொலைத்தொடர்பு குழுமத்தின் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. 

Night
Day