வரும் 12-ம் தேதி நயாப் சிங் சைனி ஹரியானா முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா முதலமைச்சராக பாஜகவின் நயாப் சிங் சைனி வரும் 12ம் தேதி மீண்டும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தலுக்கு முன்பாக ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் நயாப் சிங் சைனியே முதலமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், வரும் 12ம் தேதி ஹரியானா முதலமைச்சராக நயாப் சைனி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day