வரும் 17 - ம் தேதி அரியானா முதலமைச்சராக பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி வரும் 17ம் தேதி பதவியேற்கிறார். மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதி நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்கிறார். பஞ்சகுலாவில் உள்ள பரேட் மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னர் பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயாப் சிங் சைனி முறைப்படி தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Night
Day