வரும் 18-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : கோவையில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார். மகளிரை முன்னிலைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டதை கோவையில் நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு 2000 மகளிர் என மொத்தமாக ஒரு லட்சம் மகளிரை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு சார்பில் மகளிருக்கு தொடங்கப்பட்ட புதிய திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day