வரும் 27, 28ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 27, 28ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்ல உள்ளார். இதையொட்டி, சூலூர் விமானப்படை தளத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day