வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் 11 ஆயிரத்து 600 கோடி ரூபாயிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பது தனக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து மறைப்பதன் மூலம் வளர்ச்சி அடைய முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர், நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது என்றும், 7 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Night
Day