வாக்களிப்பதற்கு ஆதார் கட்டாயமல்ல : தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 வாக்களிப்பதற்கு ஆதார் கட்டாயமல்ல என தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சில சமுதாயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் நேரில் புகார் அளித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஆதார் அட்டைகள் இல்லாத போது, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Night
Day