வானிலை முன்அறிவிப்புகள் அறிய 'இன்சாட்-3 டிஎஸ்' செயற்கைகோள் தயார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக 'இன்சாட்-3 டிஎஸ்' என்ற செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம், பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காக கொண்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 1-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது, வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அறிந்து கொள்வதற்காக 'இன்சாட்-3 டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Night
Day