வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வரும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் களம் காண்கிறார். வேட்பு மனு தாக்கலுக்காக நேற்றே வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வாகன பேரணியில் பங்கேற்றார். பின்னர் இன்று காலை, கங்கை கரையில் உள்ள தசஅஸ்வமேத காட் என்ற இடத்தில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, சுமார் 12 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 


Night
Day