விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவில் சேருமாறு அழுத்தம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவில் சேருமாறு தமக்‍கு அழுத்தம் தருவதாக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் ரோகிணி நகரில் உள்ள கிராரி பகுதியில் அரசு பள்ளி கட்டடம் ஒன்றுக்‍கு அடிக்‍கல் நாட்டி பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக தமக்‍கு அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டினார். மத்தியில் ஆளும் அரசு தங்களுக்‍கு எதிராக சதி செய்தாலும் பாஜகவுக்கு தாம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். டெல்லி அரசின் மதுபானக்‍கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்‍கு ஆஜராகுமாறு அமலாக்‍கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் இதுவரை ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day