வினேஷ் போகத்துக்கு நீதி வேண்டும் - எதிர்கட்சிகள் வெளிநடப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக எதிர்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. வினேஷ் போகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் இந்தியா கூட்டணி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Night
Day