விரைவில் சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீ்தாராமன், ஜெய்சங்கர், பியூஸ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றும், இக்கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி சிங்கப்பூர் வருகை தர உள்ளார் என்றும், அதற்கான பயண தேதி இன்னும் முடிவாக வில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day