விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

57 தொகுதிகளில் நடைபெறும் 7-வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கினை செலுத்தினார். கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் ரவி கிஷன், சமாஜ்வாதி கட்சி சார்பில் காஜல் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜாவேத் அஷ்ரப் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

Night
Day