விலகும் நிதிஷ்குமார் - உடைகிறது இந்தியா கூட்டணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலையில் பாஜக ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு, கூட்டணி தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ள அவர், இன்ற காலை ஆளுநரை சந்தித்து ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும், மாலையில் பாஜக ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day