விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் இன்றுடன் 5-வது நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நேற்றுமுன்தினம் நடந்த 3-வது கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்து, தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையிலாவது முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் என்பதில் விவசாயிகள் உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளனர். இது தொடர்பாக நேற்று சம்யுக்த கிஸான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வாக்குறுதிகளை கொடுத்து விட்டு  மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாகவும் அதனால் இரு வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Night
Day