விவசாய சங்கங்களுடனான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகள் சங்க தலைவர்களுடன் நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய பிரதிநிதிகளுடன் 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய் மற்றும் 14 விவசாய சங்க தலைவர்கள் இடையே 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று சண்டிகரில் நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் முண்டா, விவசாய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Night
Day