வெடிகுண்டு மிரட்டல் - விமானம் தரையிறக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. 

மும்பையில் இருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று, நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்றபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட விமானம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகிக்கும் வகையில் எந்த பொருளும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

varient
Night
Day