இந்தியா
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அச்சம்
ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் கனமழை பெ...
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் பித்தாபுரத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவர் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மாலையில் பித்தாபுரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் கனமழை பெ...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...