வேர்களை கொண்டாடுவதுடன், கலாச்சாரத்தை போற்ற வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதுடன், போற்றி வணங்குவதாக முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா தெரிவித்துள்ளார். அவரது இளையமகனான ஆனந்த் அம்பானியின் திருமணம், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் மற்றும் விருந்தினர் வருகையால் அப்பகுதியே களைகட்டியுள்ளது. இதுகுறித்து நீத்தா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மகன் திருமணத்தின் போது, தனக்கு இரண்டு ஆசைகள் இருந்தாகவும், முதலில், தங்கள் ஆதி தொடக்கமான வேர்களை கொண்டாட விரும்பியதாகவும் கூறினார். இரண்டாவதாக ஜாம்நகரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதாகவும் நீத்தா அம்பானி தெரிவித்தார். 

Night
Day