வைரலான புகைப்படம் போலியானது என கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நிற்பது போல் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கடந்த 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வருகை தந்தனர். அப்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானும் ஐஸ்வர்யாராயும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அந்த புகைப்படம் போலி என்றும், ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் போஸ் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. 

Night
Day