ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை பிப்.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்டெர்லைட் வழக்கை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி அமர்வில்  விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வேறு ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றதால் ஸ்டெர்லைட் வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உத்தரவிட்டார்.

Night
Day