ஹஜ் பயணம் அழைத்து செல்வதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக செய்யப்பட்ட விளம்பரத்தை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களை அழைத்து செல்லாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏமாந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Night
Day