ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரபிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக 2 நபர்களைக் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை உத்தரபிரதேச அரசு அமைத்தது. இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஆய்வுகள் எதையும் நடத்தாமல் அனுமதி வழங்கியுள்ளனர் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தரவுகளை வழங்காமல் அனுமதி பெற்றதோடு, விதிமுறைகளையும் மீறி செயல்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விசாரணை அறிக்கையில் ஆன்மீக சொற்பொழிவாளர் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day