ஹத்ராஸ் விவகாரம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹத்ராஸ் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது என்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்தார் மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், நிர்வாகம் மாநில அரசின் மேற்பார்வையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் உறுதியளித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாஇந்த துன்பத்தை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காயமடைந்தவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும்  அரசு நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Night
Day