ஹிமாச்சலை குறுக்கு வழியில் பாஜக கைப்பற்ற நினைக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹிமாச்சல் பிரதேசத்தில், குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் அணுகுமுறை நெறியற்றது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயக நாட்டில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்றும், இமாச்சல் மக்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பணபலம், விசாரணை அமைப்புகளின் பலம் மற்றும் மத்திய அரசின் பிற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இமாச்சல் மக்களின் இந்த உரிமையை பாஜக நசுக்க பார்ப்பதாக பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

varient
Night
Day