ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமலாக்கத்துறை, சோரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்திருந்தது. இதனிடையே இன்றைய விசாரணையின்போது, ஹேமந்த் சோரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

Night
Day