ஹேமந்த் சோரனை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட ஹேமந்த் சோரன், எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஹேமந்த் சோரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், ஹேமந்த் சோரனை, ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day