ஹைதராபாத் எம்.பி. ஓவைசி வீட்டின்மீது கருப்புமை வீசிய மர்மநபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள ஹைதராபாத் எம்.பி ஓவைசி வீட்டில் மர்மநபர்கள் கருப்புமை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. AIMIM கட்சி தலைவர் ஓவைசி, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐதராபாத் எம்பி.யாக தேர்வானார். இவர் பதவியேற்பின் போது ஜெய் பாலஸ்தீனம் என கோஷம் எழுப்பியது சர்ச்சையானது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஓவைசி வீட்டின் மீது மர்மநபர்கள் கருப்பு மையை ஊற்றி சென்றுள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள ஓவைசி, சாவர்க்கர் போன்று கோழைத்தனமான செயலை நிறுத்துங்கள் என்றும், தன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆண்மகனாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

Night
Day