'ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை'' - பிரதமர் மோடி திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஊழல்காரர்களிடமிருந்து  நாட்டைக் காப்பாற்ற ஒரு பெரிய போரை தான் நடத்துவதாகவும் அதனால்தான் சிலர் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாக கூறினார். உச்ச நீதிமன்றத்தில் இருந்தும் அவர்களால் ஜாமீன் பெற முடியவில்லை எனக் குறிப்பிட்டார். ஊழலை ஒழிக்க உறுதி பூண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது ஊழல் தலைவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்தியா கூட்டணியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Night
Day