'கீழமை நீதிமன்றங்கள் என்று குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும்' - உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீழமை நீதிமன்றங்கள்’ என்று குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என நீதித்துறை பதிவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமா்வு, விசாரணை நீதிமன்றத்தை ‘கீழமை நீதிமன்றம்’ என்று குறிப்பிடுவதை நிறுத்துமாறு உச்சநீதிமன்ற பதிவாளரைக் கேட்டுக் கொண்டது. கீழமை நீதிமன்ற ஆவணங்கள்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘விசாரணை நீதிமன்ற ஆவணங்கள்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்றும் எனவே கீழமை நீதிமன்றம் எனக் குறிப்பிடுவதை இனி நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Night
Day