'மேற்கு வங்கம் : 100 நாள் வேலை பணியாளர்களுக்கு மத்திய அரசு நிதி விடுவிக்க பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநில 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமா் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது தன்னைச் சந்தித்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள், 2022 மார்ச் முதல் மத்திய அரசு நிதி விடுவிக்காததால் லட்சக்கணக்கானோர் பெரும் சிரமம் அடைந்துள்ளதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Night
Day