'விக்சித் பாரத்' செய்திகள் அனுப்புவதை நிறுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகள் அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த போதிலும், மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் "விக்சித் பாரத் சம்பார்க்"  தொடர்பான செய்திகள் மக்களின் செல்போனுக்கு அனுப்பபடுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Night
Day