''பாஜக பாணி இந்துத்துவா ஆபத்தானது'' : மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்களது இந்துத்துவா பாணி அரசியலை இஸ்லாமிய மக்கள் ஆதரிப்பதாக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே சிவசேனாவின் இந்துத்துவாவால் தங்களது வீடுகளில் அடுப்பு எரியும் என்றும் பாஜக பாணி இந்துத்துவாவால் எங்கள் வீடுகளே எரியூட்டப்படும் என இஸ்லாமியர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பகவான் ராமர் நமது நெஞ்சத்தில் உள்ளார் என்பதுதான் தங்களது இந்துத்துவா என்றும் கூறியுள்ளார். பாரத ரத்னா விருது யாருக்கு, எப்போது அறிவிக்க வேண்டுமென்ற விதிகள் முன்பு இருந்த நிலையில், இப்போது பிரதமர் மோடி வாக்குகளுக்காக தனக்கு நினைவில் வரும் நபர்களுக்கு அதை அறிவிப்பதாகவும் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day