10 ஆண்டுகளாக கேரளாவிற்கு ஒன்றும் செய்யாத மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 10 ஆண்டுகளாக கேரள மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கேரள மக்களுக்கு எவ்வளவோ பிரச்னை இருந்தும் அதனை மத்திய அரசை கண்டு கொள்வதில்லை என்றும் பாலக்காட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என கூறி பல வருடங்கள் ஆகி விட்டதாகவும் விமர்சித்தார். மேலும் கேரளாவிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக கூறிய விஜயன், அதில் எத்தனை நிறைவேற்றினார் என்று கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். 

Night
Day