11-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்ந்த பாரதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்ற வந்த பிரதமர் மோடிக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, 11-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின்னர் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. 

Night
Day