2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 13 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த ஊழியர்கள் தங்களுக்‍கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்‍கோரி போராட்டம் நடத்தி வந்தனர்​. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்‍குறுதியில் அ​றிவித்தபடி, கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இதனால் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

Night
Day