2024-25 நிதியாண்டின் பட்ஜெட் தயாரிப்பது குறித்து ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன், நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் கேட்டறிந்தார்.

Night
Day