2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும் - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 


“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் ரயில்வே விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும், தெ​ரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 97 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ஏற்கனவே ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் ரயில்வேக்கு விநியோகிக்கப்படுகிறது என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Night
Day