25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் பொறுப்பு உண்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திரத்திற்கு முன் இளைஞர்களுக்கு எப்படி நாட்டை விடுவிக்கும் பொறுப்பு இருந்ததோ, அதே போல் வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் பொறுப்பு தற்போதும் உள்ளது ​என்று முதல்முறை வாக்காளர்களை ஒன்றிணைத்த 'நவ் மாட்டேட்டா சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில்  கூடியிருந்த லட்சக்கணக்கான முதல்முறை வாக்காளர்களுடன் காணொ​லி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது ஒருவரின் வாழ்க்கை 18-25 வயதிற்குள் பல மாற்றங்களை காண்கிறது, இந்த மாற்றங்களுக்கு மத்தியில், அனைவரும் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், அதுவே உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கேற்கும் பொறுப்பு என்று கூறினார். 

Night
Day