3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாட்களுக்கு பிறகு தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், கடந்த 3 நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று மாலை ஐந்தருவி மற்றும் புலியருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். 

Night
Day