4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்முகாஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பிரிசல் சின்னிகம் பகுதியில் இருவேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த, மோதலில் தீவிரவாதிகள் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

Night
Day