5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் ஒரே நாளில் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 

2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை ராஜ்காட் நகரில் துவக்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி, மேற்கு வங்கத்தில் கல்யாணி மற்றும் ஆந்திராவின் மங்களகிரி பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளாக, நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் மட்டுமே இருந்தது எனவும், கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 

Night
Day