56 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான தங்க நகைகள் மற்றும் 45 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு துறை அரசு உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்ததையடுத்து 9 மாவட்டங்களில் 56 இடங்களில், ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் 11 அதிகாரிகளின் வீடுகளில் இருந்து மட்டும் 45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரது வீடுகளில் இருந்து 586 சூதாட்ட நாணயங்கள், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day