73 ஆயிரம் புள்ளிகளை கடந்த மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 73ஆயிரம் புள்ளிகள் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நல்ல லாபத்தை சம்பாதித்த இந்திய பங்குச்சந்தைகள், இன்றும் விறுவிறுவென உயர்வை சந்தித்தன. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் அரை மணி நேரத்தில் 73ஆயிரத்து 200 புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 22ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தின் போது விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச். சி.எல். இன்போசிஸ் பங்குகள் லாபத்தையும், ஹெச்.டி.எஃப்.சி. காப்பீடு, டாட்டா கன்ஸ்ட்ரக்‌ஷன், ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தையும் சந்தித்தன.

Night
Day