8வது முறையாக சம்மன் : ஆஜராகாத டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், காணொலி வாயிலாக ஆஜராவதாக கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி, அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியது. இதனால் இன்று கெஜ்ரிவால் ஆஜராவாரா? என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பிய அவர், சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது என்றும், ஆனால் அதற்கு பிறகு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 12ம் தேதிக்கு பிறகு தேதியை தெரிவித்தால் காணொலி வாயிலாக ஆஜராவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day