ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை காலி செய்ய காலக்கெடு நீட்டிப்பு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை காலி செய்வதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்ற நீட்டித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கப்பட்டதால் ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை வரும் 15ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, மற்ற கட்சிகளை போல ஆம் ஆத்மி கட்சிக்கு அலுவலகம் அமைக்க இடம் தரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 10 தேதி வரை அலுவலகத்தை காலி செய்வதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

Night
Day