ED, IT மிரட்டலால் 411 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே சாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் ஜனநாயகமோ தோ்தலோ தேவையில்லை என பிரதமா் மோடி கூறும் காலம் தொலைவில் இல்லை என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினா்களை தன் கட்சிக்கு மத்திய அரசு இழுப்பதால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனா் என்றார். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மிரட்டலால் இதுவரை 411 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸில் உள்ளவர்களை ஊழல்வாதிகள் எனக் கூறும் பாஜக, அதே தலைவா்கள் பாஜகவில் இணைந்தபிறகு அவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து மிகவும் நல்ல தலைவா்கள் என சான்று வழங்குவதாகவும் சாடினார். 

Night
Day