ED கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. முன்னதாக மனு மீதான தீர்ப்பை கடந்த மே 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில், ​​ஆம் ஆத்மி கட்சிக்கு ஹவாலா வழிகளில் பணம் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு, அமலாக்கத்துறை இப்போது கூறும் ஆதாரங்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் கைதை நியாயப்படுத்த அமலாக்கத்துறை முயல்வதாக கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தநிலையில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Night
Day