Exit Poll எதிரொலி- சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்‍களவை தேர்தல் கணிப்பு தாக்‍கம் ​காரணமாக மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.

வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்‍ஸ் 2 ஆயிரத்து 10 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 971.38 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 23 ஆயிரத்து 300 புள்ளிகளில் வர்த்தகமானது. வாரத்தின் முதல் நாளிலேயே அதிலும் வர்த்தகத்தின் தொடக்‍கத்திலேயே பங்கு சந்தை வர்த்தகம் 2 ஆயிரம் புள்ளிகளுக்‍கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Night
Day